Thursday, May 31, 2018

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, "பள்ளிகுப்பம்" மாதனூர் ஒன்றியம் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி வீடு வீடாக துண்டு பிரசுரம் விநியோகம்!!






ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, "பள்ளிகுப்பம்" மாதனூர் ஒன்றியம்
மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி வீடு வீடாக துண்டு பிரசுரம் விநியோகம்!!

பள்ளிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2018-19 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு பள்ளியின் குடியிருப்பு பகுதிகளான #பூமலைபுரம், #அண்ணாநகர், #வன்னியபுரம், #முள்ளிபாளையம், #வரதாபாளையம், #மேல்தெரு, #கீழ்தெரு, #செல்லகுட்டிப்பட்டி, #புத்தர் நகர் ஆகிய இடங்களில்
30.05.2018 அன்று
துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
தலைமையாசிரியர் சேகர் மற்றும் ஆசிரியர்கள் ரேவதி, நளினசங்கரி, கேசலட்சுமி, ஷர்மிளா ஆகியோர் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோவில்
வீடு வீடாக சென்று பெற்றோர்களை சந்தித்து பள்ளியின் சிறப்பம்சங்கள், சென்ற ஆண்டு சாதனைகள், வரும் கல்வியாண்டின் இலக்குகள் ஆகியவற்றை எடுத்துக்கூறி மாணவர்களை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தினர்.
பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் மகிழ்ச்சியாக வரவேற்று தம் பிள்ளைகளை கண்டிப்பாக பள்ளியில் சேர்ப்பதாக உறுதிமொழி அளித்தனர்.

No comments:

Post a Comment